Friday, October 21, 2011

வானவில்லின் பிறப்பு


வானவில்லின் பிறப்பு  

தெரிந்து விட்டது எனக்கு!!
வானவில் எப்படி தோன்றுகிறது என்று..

மழையை ரசிக்க நீ வீட்டை விட்டு
வெளியே வரும் போது
உன்னை காண வெட்கப்பட்டது சூரியன்!!

வெட்கத்தால் அதன் கன்னம் சுருங்கியபோது
விரிந்ததே "வானவில்"..

கொள்ளைக்காரியடி நீ!!

  

நான் எழுதிய மேற்கண்ட கவிதை எழுத்து தளத்தில் வெளியாகியுள்ளது.
பதிவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் பதிவுலகுக்கு புதிது. தாங்கள் பதிவை படித்த பின்பு உங்கள் எண்ணங்களை (நன்றோ தீதோ) பின்னூட்டத்தில் பதிவு செய்தால் என் எழுத்தின் குறைகளை சரி செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.எனவே நீங்கள் தாராளமாய் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

vvaazththukkaL வாழ்த்துக்கள் மேன்மேலும் வ:ளர

கார்த்தி said...

ரொம்ப நன்றி அண்ணே..

அம்பாளடியாள் said...

குறுங் கவிதை அருமை !...வாழ்த்துக்கள் சகோ
உங்கள் வலைத்தள ஆக்கமும் ஊக்கமும் வளம்பெற்று
நிலையான நன்மதிப்பைப் பெற்றிடுங்கள் ..............

அம்பாளடியாள் said...

உங்கள் ஆக்கங்கள் பிரபலம் அடைய இன்ட்லி ,தமிழ் 10 போன்ற இணையத்தளத்தினை இணைத்துக் கொள்ளுங்கள் சகோ .மிக்க நன்றி வருகைக்கும் பகிர்வுக்கும் .

Post a Comment

உங்கள் கருத்துக்கள்