கடலில் உள்ள ஒரு நீர்த்துளி ஒன்று உன் மேல் காதல் கொண்டது ..
அதனால்
கடும்வெயிலில் தவம் புரிந்தது,
கரிய மேகமாய் வானை அடைந்தது,
குளிர் மழையாய் பொழிய அழுதது,
குபீரென பூமியில் குதித்தோடியது….
பாறைகளில் மோதி பள்ளங்களை நிரப்பி,
வேர்களில் புகுந்து அருவிகளில் வீழ்ந்து
கரைகளை முட்டி அணைகளை தாண்டி,
ஓடைகளில் ஒடுங்கி ஆறுகளில் அருகி,
ஒருவழியாய் அடைந்தது உன் வீட்டு அண்டாவில்..
வந்தாய் நீயும்,
மெதுவாய் அள்ளினாய் நீரை,
அந்த நீர்துளியையும் சேர்த்து,
அதனால்
கடும்வெயிலில் தவம் புரிந்தது,
கரிய மேகமாய் வானை அடைந்தது,
குளிர் மழையாய் பொழிய அழுதது,
குபீரென பூமியில் குதித்தோடியது….
பாறைகளில் மோதி பள்ளங்களை நிரப்பி,
வேர்களில் புகுந்து அருவிகளில் வீழ்ந்து
கரைகளை முட்டி அணைகளை தாண்டி,
ஓடைகளில் ஒடுங்கி ஆறுகளில் அருகி,
ஒருவழியாய் அடைந்தது உன் வீட்டு அண்டாவில்..
வந்தாய் நீயும்,
மெதுவாய் அள்ளினாய் நீரை,
அந்த நீர்துளியையும் சேர்த்து,
மெழுகினாய் உன் தேகத்தை அந்நீரால்
உருகியது நீர்த்துளி,
உளம் மகிழ்ந்து விட்டது உயிரை..
ஏன் இப்படி இருக்கிறாய் பெண்ணே!!
நான் எழுதிய மேற்கண்ட கவிதை எழுத்து தளத்தில் வெளியாகியுள்ளது.
பதிவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் பதிவுலகுக்கு புதிது. தாங்கள் பதிவை படித்த பின்பு உங்கள் எண்ணங்களை (நன்றோ தீதோ) பின்னூட்டத்தில் பதிவு செய்தால் என் எழுத்தின் குறைகளை சரி செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.எனவே நீங்கள் தாராளமாய் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்