Tuesday, October 18, 2011

பட்டாசில்லா தீபாவளி..

இந்த தீபாவளிக்கு அனேகமாக எல்லோரும் உடைகள், இனிப்புகள் வாங்கி இருப்பீர்கள். பட்டாசு வாங்கபோகிறீர்கள் என்றால் கொஞ்சம் இங்கே  கவனித்து செல்லுங்கள். 

பெரும்பாலும் பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. சிறுவயதில் இருந்தே  நாம் எல்லோரும் தீபாவளிக்கு ஜட்டி வாங்குகிரோமோ இல்லையோ சீனி வெடி. ஓலை வெடி , பாம்பு வெடி கண்டிப்பாக வாங்குவோம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றதற்கான  மகிழ்ச்சியை பட்டாசு மூலம் வெளிபடுத்துவதாக வீட்டில் சொல்லுவார்கள்..ஆனால் நமக்கு அது தேவை இல்லை. வெடிக்கும் போது ஏற்படும் "டாம் டம் டும்  " சத்தம் தான்.

தலையணை பக்கத்தில் பட்டாசோடு தீபாவளி முன்னிரவை கழித்த பொழுதுகள் நிறைய உண்டு. அவற்றின் தீமைகளை அறியும் வரை ......

ஐந்து ஆண்டுகளுக்கு முன், தீபாவளி மூன்று நாட்கள் இருக்க நண்பர்கள் சிலர் பட்டாசு என்ன வாங்குவது  என்று தெரு முனை ஒன்றில் விவாதித்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு சிறுவன் அணுகுண்டு ஒன்றை மரம் ஒன்றின் அருகில் மெதுவாக பற்ற வைத்தான்.மெல்ல புகையை வெளித்தள்ளிய அணுகுண்டு டமாரென்ற பெரும்சப்தத்துடன் வெடித்தது.அங்கிருந்த சிறுவர்கள் குதித்து கைகொட்டி சிரித்தார்கள். 

அப்போது நாங்கள் கண்ட காட்சி முகத்தில் அடித்தாற்போல் இருந்தது.
ஒரு சிறிய சிட்டுக்குருவி அம்மரத்தில் கூடு ஒன்றைக் தாழ்வாக கட்டியிருந்தது.பெரும்சப்த்ததுடன் வெடித்த வெடியின் அதிர்ச்சியில் அங்கிருந்த இருகுருவிகளும் கீழே விழுந்தன. பின்பு தட்டு தடுமாறி மிக முயன்று பட படவென்று சிறகை விரித்து விரைவாக பறந்தோடி வானத்தில் தொலைந்தன.. வேகமாக பக்கத்துக்கு வீட்டு அக்காவிடம் அனுமதி வாங்கி மாடிக்கு சென்று  குருவியை தென்படுகிறதா என்று தேடி பார்த்தோம்.ம்ஹூம் .. அன்று இரவு வரை சிறுவர்கள் வெடித்துக் கொண்டு இருந்ததால் குருவிகள் திரும்ப வரவேயில்லை.
  
இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.திடீரென்று நம்மை யாரவது பின்னால் இருந்து லேசாக பயமுறுத்தினால், தூங்கிகொண்டிருக்கும் போது சத்தம் போட்டால் எவ்வுளவு பயப்படுகிறோம். உருவத்தில் சிறிய அந்த குருவிக்கு வெடி வெடித்த பொது ஏற்பட்ட அதிர்ச்சி நிச்சயம் வலி மிகுந்ததாய் இருக்கும் என்று உணர்ந்தது மனம்.

 வித்தியாசம்  இல்லாமல் எங்கள்  எல்லோரையும் பாதித்திருந்தது அந்த நிகழ்வு. அன்று முடிவு எடுத்தோம் இனி பட்டாசு வாங்குவதில்லை என்று.
பிற உயிர்களை துன்புறுத்தி மகிழ்ச்சி அடைவது போன்று ஒரு ஈனத்தனம் இல்லை என்று அந்த குருவி கீழே விழுந்து எழ முயன்ற போது சொன்னதாக எனக்கு உரைத்தது.அன்றிலிருந்து கடந்த ஐந்து தீபாவளிகளாக நாங்கள் பட்டாசு கொளுத்துவதில்லை.இந்த ஆண்டும் மிகப்பெருமையுடன் அதை தொடர இருக்கிறோம்.

பட்டாசுகளால் காற்று மாசு, ஒலி மாசு போன்றவை ஒரு புறம் இருக்க சத்தமில்லாமல்(?) நாம் நம் சொந்த பறவைகளை அழித்து வருவது வேதனைக்குரியது.

கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள், மருத்துவமனையில் இருப்பவர்கள் ஏற்கனவே உடலால் அனுபவித்து வரும் சோதனையை மேலும் வலுப்படுத்துகிறது இந்த பட்டாசு என்னும் நரகாசுரன்.


தொலைக்காட்சிகளில் நாம் அடிக்கடி காண்பது "பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து. தொழிலார்கள் தீயில் கருகி பலி." நம்மை பொறுத்த மட்டிலும் செய்தியாய் போய்விட்ட அந்த தொழிலார்களின் வாழ்க்கை பின்னால் நம்முடைய மகிழ்ச்சிக்காக அவர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் என்ற உண்மை நம்ச்கு எப்போது உரைக்கும்??

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.(எல்லாம் அந்த நாசமாய்ப் போன  லஞ்ச அரக்கர்கள் தான்)

எனவே இப்பதிவை  படிக்கும் அனைத்து பதிவுலகர்களுகும் அன்புடன் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் "தயவு செய்து பட்டாசு கொளுத்தாதீர்கள்!! அமைதியாக இனிமையாக தீபாவளி கொண்டாடுங்கள்..கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறோம் .........

(பி.கு) குருவி புகைப்படம் நன்றி : "பெயர் அறியாத நண்பர்"

மற்ற  இரண்டு படங்களும் உபயம் : கூகுளாண்டவர்

4 comments:

rajamelaiyur said...

//
பட்டாசுகளால் காற்று மாசு, ஒலி மாசு போன்றவை ஒரு புறம் இருக்க சத்தமில்லாமல்(?) நாம் நம் சொந்த பறவைகளை அழித்து வருவது வேதனைக்குரியது.
//

வருத்தமானா விஷயம்

rajamelaiyur said...

//
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.(எல்லாம் அந்த நாசமாய்ப் போன லஞ்ச அரக்கர்கள் தான்)
//
உணமைதான்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM

கார்த்தி said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா: நன்றி நண்பரே..

Post a Comment

உங்கள் கருத்துக்கள்